Monday, March 31, 2008

Ki. Ra. Documentery Film Release

கி. ராஜநாராயணன் குறித்து புதுவை இளவேனில் தயரித்திருக்கும் ‘இடைசெவல்' என்கிற டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஒருவரைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது.

முன்பும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் எடுத்த படம். ஜெயகாந்தன் குறித்த படம். வைக்கம் முஹம்மத் பஷீர், ஓ.வி. விஜயன், யு.ஆர். அனந்த மூர்த்தி குறித்த சாஹித்ய அகதமியின் டாக்குமெண்டரிகள்.

இந்தப் படங்கள் அனைத்தும் எனக்கு உணர்த்திய ஒரு செய்தி, சம்பந்தப்பட்ட எழுத்தாளர், டாக்குமெண்டரியின் இயக்குநரை எந்தளவு அல்லது எந்த விதமாக பாதித்திருக்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் படத்தின் தரமே தவிர வேறு விதமாக சாத்தியமில்லை என்பதுதான்.

இளவேனிலின் படத்தில் எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்த விஷயம், டாக்குமெண்டரி இடைசெவலைப் பற்றியதா, கி.ராவைப் பற்றியதா என்பது. இடைசெவல் ஒரு கிராமம். அது ஒரு ‘மாதிரி கிராமம்' என்று கி.ரா. சொல்கிறார். பச்சையாக, ஆடுகள் மேய, சிறுவர்கள் கிணற்றில் பாய, ஆள் அரவமற்ற வனாந்திரங்களுடன் அழகாக இருக்கும் கிராமம்.

கி.ரா. இடைசெவலை விட்டு இடம்பெயர்ந்து பல காலம் ஆகிவிட்டது. இந்தப் படத்துக்காகத்தான் அவர் மீண்டும் கிராமத்துக்குச் சென்றார் என்று கேள்விப்பட்டேன். பழைய பள்ளிக்கூடம், வேப்பமரம், நந்தவனம், பால்ய நண்பர் கு. அழகிரிசாமியின் வீடு, குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் என்று பல இடங்களை நினைவுகூர்கிறார். ஆனால் Nostalgiaவுக்கே உரிய பரவசம் அவரது விவரிப்பில் இல்லை. இந்த மண் எனக்கு மொழியைக் கொடுத்தது, பதிலுக்கு நானும் என் நண்பனும் ஆளுக்கொரு சாஹித்ய அகதமி விருது வாங்கிக் கொடுத்துவிட்டோம், அத்தோடு சரி என்பது போல் ஒரு தோரணை. இது நான் எதிர்பாராதது. எனவே, மிகுந்த ஏமாற்றமடைந்தேன்.

இளம் வயதில் காசநோய்த் தாக்குதலுக்கு உள்ளானது, அதற்கான சரியான மருந்து கிடைக்காத காலத்தில், உயிர் பிழைக்கப் போராடியது, 250 ரூபாய் செலவில் திருமணம் முடித்தது, இசையில் ஆர்வம் வந்தது என்று சில விஷயங்களை நினைவுகூர்கிறார்.

மிகத் தீவிரமான இசை ஆர்வத்துடன் இயங்கியவர், பாடவும் வயலின் வாசிக்கவும் கற்றுக்கொண்டவர், எந்தக் கணத்தில் எழுத்துக்கு இடம்பெயர்ந்தார் என்பதை இந்த டாக்குமெண்டரி சரியாகச் சொல்லவில்லை.

கலை மனம் என்பது ஒன்றுதான். பாடவும் வயலின் வாசிக்கவும் ஓவியம் வரையவும் பானை செய்யவும் போட்டோ எடுக்கவும் டான்ஸ் ஆடவும் எழுதவும் வேறு வேறு மனம் கிடையாது. ஆனால் ஓர் இடப்பெயர்ச்சி அல்லது தளப்பெயர்ச்சி நடக்கிறதென்றால் அதற்கான தருணத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

கி.ராவின் சிறுகதைகள் போலவே அவருடைய கிராமாந்திரப் பலான கதைகளும் புகழ்பெற்றவை. மிகுந்த சர்ச்சைகளை உண்டாக்கியவை. அவர் ஏன் அக்கதைகளை எழுதினார் என்று தாயில் அவை தொடராக வெளியானபோது அவரது தீவிர ரசிகர்கள் ஆதங்கப்பட்டதை அறிவேன். கி.ராவின் எழுத்துப் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமான அது குறித்த நினைவுகூரல்கள் இந்த டாக்குமெண்டரியில் இல்லை.

தமிழில் இதுவரை நிகழ்த்தப்பட்ட சிறுவர் இலக்கிய முயற்சிகளுள் அவரது ‘பிஞ்சுகள்' இன்றுவரை இன்னொருவர் நெருங்காத உயரத்தில் உள்ளது. அதன்பின் அவர் ஏன் அத்தகைய படைப்பை உருவாக்கவில்லை? தெரியவில்லை. இந்தப் படத்தில் பதில் இல்லை.

கி.ராவை ஆயிரம் பேர் படிப்பார்கள். அவர் யாரைப் படிப்பார்? தெரியவில்லை. அவரது இரு வாரிசுகளும் வேறு வேறு துறைகளுக்குச் சென்று விட்டார்கள். அது பிரச்னையில்லை. ஆனால் தந்தையின் படைப்புகளை அவர்கள் படிப்பார்களா? அவர் விரும்பியபடி நான் வளரவில்லை என்று அவரது ஒரு மகன் பேசுகிறார். நிச்சயம் வருத்தம் தோய்ந்த நினைவுகூரலாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் சரியாக வெளிப்படவில்லை. என்ன காரணத்தினாலோ இயக்குநர், படத்தில் இடம்பெறும் அத்தனை பேரையும் ஒட்டுச் சுவரைப் பார்த்தே பேச வைத்திருக்கிறார். கேமராவுக்கு முகத்தையல்லாமல் காதை மட்டுமே அனைவரும் காட்டுகிறார்கள்.

இதனை ஓர் உத்தியாக இயக்குநர் நினைத்திருக்கலாம். ஆனால் பேசுகிற விஷயம் அதன் முழு வீச்சுடன் தாக்கம் ஏற்படுத்தத் தயங்கிவிடுகிறது. கடனே என்று அனைவரும் முகத்தைத் திருப்பிவைத்துக்கொண்டு பேசுவது போல.

இந்தப் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது ஏனோ திரும்பத் திரும்ப பஷீர் குறித்த டாக்குமெண்டரி நினைவுக்கு வந்தபடி இருந்தது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை அந்தப் படத்தில் பஷீரின் கைவிரல்களும் கால் விரல்களும் துடித்துக்கொண்டே இருந்தன. அது அவருடைய மேனரிஸம். வாழ்நாளெல்லாம் அலையும் துறவியாக இருந்துவிட்டு, வயோதிகத்தில் வீட்டில் அடைக்கலமானவருடைய வாழ்வின் கதியோட்டத்தை அந்த மேனரிசமே குறிப்பில் உணர்த்திக்கொண்டிருந்தது.

கி.ராவைப் பற்றி இன்னொரு படம் தயாரிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

Tuesday, March 25, 2008

Film on Tamil writer

Film on Tamil writer

The Rajya Sabha Member, Kanimozhi, on Saturday launched a short film featuring Tamil writer K. Raja Narayanan, whose life and story telling moments have been captured to educate the younger generation on the importance of upholding values in life.

Speaking on the occasion, Ms. Kanimozhi said the film captures the spirit of villages and the life of villagers and how Mr. Raja Narayanan had made a mark in story telling and through letter writing.

Cine Actor, Sivakumar, said the short film on “Ki.Ra’s Fountainhead of Creativity” sharply brings out the imperative need for protecting the aged and give them the due respect.

D. Jayakanthan, Tamil novelist, said the timing of release of the short film on Raja Narayanan of Idaiseval in Thirunelveli district was apt and would go along way in bringing out the facets of rural life.

Rev. Fr. Jegath Gaspar Raj, Managing Trustee of Tamil Maiyam, had a word of praise for Vasanthi Prahaladan, the producer, and those responsible for producing the film including D. Mohanasundaram, B. Lenin and Puduvai Ilavenil for making the documentrary film on Mr. Raja Narayanan.
Courtesy: The Hindu Dated March 23, 2008

Monday, March 24, 2008

KI.RAJANARAYANAN’S DOCUMENTARY FILM RELEASE

KI.RAJANARAYANAN’S DOCUMENTARY FILM!!



Ki.Ra's Documentary film release function was held at Santhome Cultural hall,luz tom (22/3/08)Saturday by 10.00am.The film was made by Ms.Vasanthi Pragalathan from france. The documentary was released by Kavingar.Kanimozhi MP, & received by Kavingar Tamizhachi Thangapandian in the presence of writer Jayakanthan and Sivakumar.
Courtesy : http://tamizhmovies.com/index.asp

கி.ரா.வின் 'இடைசெவல்' வெளியீடு!



தமிழ் இலக்கிய உலகத்தில் கரிசல் காட்டு எழுத்தாளராக அறியப்படும் கி.ரா.. என்கிற கி.ராஜநாராயணனைப் பற்றி ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


பெரும்பாலான எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் தன் கேமராவிற்குள் பிடித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல்மிக்க புகைப்பட கலைஞராக திகழும் புதுவை இளவேனில் 'இடைசெவல்' என்று அழைக்கப்படும் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.


சம்பளம் எதுவும் வாங்காமல் இந்தப்படத்திற்கென எடிட்டிங் செய்து கொடுத்திருக்கிறார் எடிட்டர் பி.லெனின்.'





இடைசெவல்' - பெயரைப் போலவே படம் ஆரம்பிப்பதும் 'இடைசெவல்' கிராமத்தில் தான். பழைய திருநெல்வேலி மாவட்டம் அருகே... என்று படம் துவங்குகையில்... மண்வாசனையை நுகர்ந்து கொண்டே... ஒரு அசலான கிராமத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு உணர்வு நமக்குள் ஏற்படுகிறது.




















தன்னுடைய கதைகள் போலவே கி.ரா.வும் வெகு இயல்பு. நான் என்ன பேச வேண்டும் என்று கலந்து கொண்டவர்களிடம் கி.ரா. கேட்கையில் ஒரு வெள்ள நதியான, எளிமையான மனிதனை நம்முன் காட்டுகிறார்.

கி.ரா.ஜெயகாந்தன், கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜெகத் கஸ்பர், ரவிக்குமார் எம்.எல்.ஏ, நடிகர் சிவகுமார், இயக்குனர் தங்கர்பச்சன், விமர்சகர் இந்திரன்... என கலந்து கொண்டவர்களின் பட்டியல் கலப்படமாய் இருந்தது சுவை.

வயதானவர்கள் பற்றி கி.ரா. சொன்னதாக நடிகர் சிவகுமார் சொன்ன கதை... அவ்வளவு அழகு. அவ்வளவு அர்த்தம். தங்கர்பச்சன் உரிமையுடன் அப்பா என்று அழைத்து நெகிழ்ந்தார்.

படத்தை தயாரித்த வசந்தி பிரகலாதன் பேசுகையில், ''தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை, நாம் உரிய நேரத்தில் கொடுப்பதில்லை'' என்ற உண்மையை பட்டவர்த்தனமாக சுட்டிக்காட்டினார.

இலக்கியம், சினிமா, அரசியல் மூன்றும் ஒரு தண்டவாளத்தில் பயணிக்க ஆரம்பித்தால் அந்த தேசம்... உலகை ஆளும் என்பது இந்த நிகழ்வின் மூலமாக நாம் பெறும் செய்தி. தொடர்ந்து சினிமாவும், இலக்கியமும், அரசியலும் ஒன்றுக்கொன்று கைகோர்த்து நியாயமான உதவிகளை பாரபட்சமில்லாமல் செய்யட்டுமாக...

படைப்பாளிகளையும், படைப்பாளிகளை கௌரவிப்பவர்களையும் நெஞ்சார வாழ்த்துவோம்.

Courtesy: http://www.thangamonline.com/